ஷங்கர் டைரக்ஷனில் விக்ரம் நடித்து பொங்கலுக்கு ரிலீசான ஐ படத்தின் திருநங்கைகளை கேவலப்படுத்தியிருப்பதாக தமிழகம் முழுவதும் உள்ள திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியான 'ஐ' படம் திரைப்படத்தில் திருநங்கைகளை கேவலமாக கிண்டல் செய்திருப்பதாகக் கூறி தமிழகம் முழுவதும் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ படத்தில் விக்ரமுக்கு மேக்கப் மேனாக நடித்த இந்தியாவின் புகழ்பெற்ற மேக்கப் கலைஞரான ஓஜாஸ் ரஜனி அவரை ஒருதலையாக காதலிக்கும் திருநங்கையாகவே நடித்திருக்கிறார்.
விக்ரமிற்கு மேக்கப் மற்றும் ஸ்டைலிஸ் செய்பவராக வரும் இந்த ஓஜாஸ் ஒரு கட்டத்தில் விக்ரமின் மீது காதல் கொள்வார். அவருக்கும், விக்ரமுக்கு மிகவும் நெருக்கமான காட்சிகள் கூட படத்தில் உண்டு.
இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில் உள்ள திருநங்கைகளை அமைதிகாக்கும் படி ஓஜாஸ் ரஜனி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
"ஐ படத்தினை பார்த்து யாரும் கோபப்பட வேண்டாம். இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டரை மிக அழகுடனும், செய் நேர்த்தியுடனும் வடிவமைத்திருக்கிறார். என் கேரக்டருக்கு ஏற்ற காதல் வயப்படுதல்ம் அதனால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே படத்தில் காட்டியிருக்கிறார்.
திருநங்கைகளை எந்த விதத்திலும் 'ஐ' படம் படத்தில் தவறாக காட்டவில்லை. 'ஐ' படம் திரைப்படம் சிறந்த ஸ்டார் நட்சத்திரங்களைக் கொண்டு சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது படம் நல்ல முறையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் திருநங்கைகள் யாரும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். இது படத்தின் வசூலை பெரிதும் பாதிக்கும் என்று கூறியிருக்கிறார் ஓஜாஸ்.
ஓஜாஸ் சொல்வதை கேட்பார்களா தமிழ்நாட்டு திருநங்கைகள்?
Show Konversi KodeHide Konversi Kode Show EmoticonHide Emoticon