a

ரசிகர்களால் டிவிட்டரில் இருந்து வெளியேற நினைக்கும் விஜய்


தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இவரின் ரசிகர்கள் எப்போதுமே ஆதரவாகவே இருப்பார்கள்.

இந்நிலையில் சமீபகாலமாக ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூகத்தளங்களில் அஜித் ரசிகர்கள் விஜய்யையும், விஜய் ரசிகர்கள் அஜித்தையும் மாறிமாறி திட்டி வருகின்றனர்.

இதனை பார்த்த விஜய்யின் மகன் சஞ்சய் உடனடியாக இதுபோன்ற விஷயங்களை கட்டுப்படுத்தி ஒரு முடிவு கட்டுமாறு சொன்னாராம்.

இதனால் தற்போது விஜய் தனது ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.சமூக வலைத்தளங்களில் இருக்கும் அனைவரும் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் ஸ்டேட்டஸ் போடவேண்டும்.

இனிமேலும் வலைத்தளங்களில் வன்முறை தொடர்ந்தால் டுவிட்டரில் இருந்து தான் வெளியேறி விடுவதாகவும் எச்சரித்துள்ளாராம்.
Previous
Next Post »
Thanks for your comment