a

பொது விழாக்களில் கவர்ச்சி ஆடையில் பங்கேற்பது ஏன்? –சமந்தா விளக்கம்

பொது விழாக்களில் கவர்ச்சி ஆடையில் பங்கேற்பது ஏன்? –சமந்தா விளக்கம்

சமந்தா பொது விழாக்களில் கவர்ச்சி உடையில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் தெலுங்கு விருது விழா ஒன்றில் முதுகு தெரியும்படி ஆபாசமாக உடை அணிந்து வந்தார். விழாக்குழுவினர் எல்லோரும் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர்.

இதுபோல கோவாவில் தோழியுடன் புத்தாண்டு கொண்டாட சென்று இருந்த அவர் கவர்ச்சியாக ஆடை அணிந்து அங்குள்ள தெருக்களில் பைக் ஓட்டிச் சென்றார்.

நடிகை ஸ்ரேயா சென்னையில் நடந்த படவிழா ஒன்றில் இது போல் ஆபாச உடை அணிந்து வந்து கண்டனங்களுக்கு உள்ளானார். போலீசிலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அவரை மிஞ்சும் விதமாக சமந்தா ஆபாச உடைகளில் வலம் வருகிறார்.

இது குறித்து சமந்தாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

எனக்கு கவர்ச்சியாக இருப்பது பிடிக்கும். எப்போதும் நான் சிரித்த முகமாய் இருக்கிறேன் என்கிறார்கள். சிறு வயதில் இருந்தே நான் அப்படித்தான். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன். அதுவே முகத்துக்கு அழகை தரும். சிலர் கேமரா முன்னால் மட்டுமே சிரிப்பார்கள். மற்ற நேரம் இறுக்கமான முகத்தோடு இருப்பார்கள்.

நடிகைகளை பொறுத்த வரை திரையிலும் பொது இடங்களிலும் அழகான தோற்றத்தோடு இருக்க வேண்டும். எனவேதான் நான் கவர்ச்சியாக இருக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Previous
Next Post »
Thanks for your comment