எல்லா முன்னணி நடிகர்களும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட நடிகர்கள் தங்களது ரசிகர்களுடன் நேரடியாக பேசி வந்தனர். இது ஒரு நடிகருக்கும், ரசிகருக்கும் இடையே நல்ல தொடர்புத் தளமாக இருந்து வருகிறது.
இந்த லிஸ்ட்டில் நடிகர் சூர்யா மட்டும் இணையாமல் இருந்தார். இந்த நிலையில் இன்று திடீரென்று எந்தவித முன்னறிவிப்பும் இன்று சூர்யா ஃபேஸ்புக்கில் இணைந்தார்.
சூர்யா ஃபேஸ்புக்கில் வந்துவிட்டார் என்பது தெரிந்தவுடன் அவரது ரசிகர்கள் உற்சாகமாகினர்.
சூர்யா பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலியான ஃபேஸ்புக் பக்கம் இதுதான்
இது சூர்யாவின் அதிகாரப்பூர்வமான ஃபேஸ்புக் பக்கம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்ததால் ஆரம்பித்த 1/2 மணி நேரத்தில் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை 6 ஆயிரம் பேர் லைக் செய்திருந்தனர். பலரும் சூர்யாவுக்கு வெல்கம் சொல்லி கமெண்ட் போட்டிருந்தனர்.
இந்தத் தகவல் சூர்யாவின் காதுகளுக்குப் போக, அவரோ அதிர்ச்சியடைந்து விட்டார். காரணம் அவர் இன்னும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலோ சேரவே இல்லையாம்.
அவரது பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்பக்கம் ஒரு போலியான பக்கம் என்றும், ரசிகர்கள் யாரும் இந்தப்பக்கத்தில் லைக் கொடுத்து நம்பி ஏமாற வேண்டாம் என்று சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்த போலி பக்கத்தை ஆரம்பித்த்தவர்களை தண்டிக்குமாறு சைபர் கிரைமிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Show Konversi KodeHide Konversi Kode Show EmoticonHide Emoticon