விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
புலி என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் தந்தை-மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படம் விஜய் கேரியரிலேயே இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக வரவிருக்கிறது.
சிம்புதேவன் என்றாலே சரித்திர கதைகளுக்கு பெயர் பெற்றவர் என்று நமக்கு தெரியும். இப்படமும் சரித்திர பின்னணியிலே உருவாகிவருவதால் விஜய் குள்ள மனிதராக நடிக்கிறார் என்றும், ராஜா காலத்து கதை என்றும் இப்படத்தை பாற்றி நாளுக்கு நாள் பல தகவல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கிறது.
ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின் படி இப்படம் முன் ஜென்மம் பற்றிய கதையாம், தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற மகதீரா படத்தை போன்றே விஜய் அரசர் காலம், நிகழ் காலம் என இரண்டு வேடங்களிலும் கலக்கி வருகிறாராம். இதில் அரசர் காலத்தில் நடிக்கும் விஜய் பல கலைகளை தெரிந்த தளபதியாக வருகிறார்.
ஸ்ரீதேவி ராணியாகவும், அவருடைய மகளாக ஹன்சிகாவும், மகனாக சுதீப்பும் வருகிறார்களாம். இதில் சுதீப் எதிர் நாட்டு தளபதியாக வருகிறார். ஹன்சிகா எப்படி விஜய்யின் காதல் வலையில் விழுகிறார், விஜய் எப்படி ஸ்ரீதேவி மனதில் இடம்பிடிக்கிறார் என்பதுதான் அரசர் காலத்து கதை.
மாடர்ன் காலத்தில் ஸ்ருதிஹாசனுடன் வரும் விஜய் குள்ள மனிதராக நடிக்கிறார். அவர் ஏன் குள்ளமனிதராக நடிக்கிறார்..? என்ன காரணம் என்பதை படம் பார்த்தால் தான் புரியும்
Show Konversi KodeHide Konversi Kode Show EmoticonHide Emoticon