a

சூர்யாவிற்கு நன்றி சொன்ன விஜய்!


விஜய் எப்போதும் தனக்கு உதவி செய்தவர்களை மறக்காதவர். இவர் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு புலி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா கையில் தான் இருந்தது.

ஆனால், விஜய் கேட்டதற்கு இனங்க டைட்டிலை கொடுத்து விட்டாராம். விஜய் தன் திரைப்பயணத்தில் மிகவும் பின் தங்கி இருந்த போது குஷி படத்தின் மூலம் தூக்கிவிட்டவர் எஸ்.ஜே.சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தற்போது தனக்கு இந்த தலைப்பு வழங்கியதற்காக எஸ்.ஜே.சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Previous
Next Post »
Thanks for your comment